ஹோலி கொண்டாட்டத்தில் ஜப்பானிய இளம் பெண் மானபங்கம்!! -மூவரை கைது செய்த பொலிஸ்-

ஆசிரியர் - Editor II
ஹோலி கொண்டாட்டத்தில் ஜப்பானிய இளம் பெண் மானபங்கம்!! -மூவரை கைது செய்த பொலிஸ்-

டெல்லியில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டு துன்பறுத்தப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஹோலி பண்டிகையன்று ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவரை துன்புறுத்திய மற்றும் மானபங்கம் செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளம் சுற்றுலாப் பயணி மத்திய டெல்லியில் உள்ள பஹர்கஞ்சில் தங்கியிருந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர், ஒரு சிறார், அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பெண் இதுவரை முறைப்பாடு செய்யவில்லை என்றும், அவர் நேற்று வங்களாதேஸிற்க்கு புறப்பட்டுச் சென்றார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வங்களாதேஸில் இருக்கும் அப்பெண் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதாக ட்வீட் செய்துள்ளார் என்று பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் நிலையில், கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன.

வீடியோவில், "ஹோலி ஹை" என்ற கோஷங்களுக்கு மத்தியில் ஆண்கள் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து அவள் மீது வண்ணங்களைப் பூசியுள்ளனர்.

ஒரு சிறுவன் அப்பெண்ணின் தலையில் முட்டையை உடைத்துள்ளார். மற்றோருவர் அப்பெண்னின் பின் தொடையில் யாரும் பார்த்திடாதபடி அடித்துள்ளார். இறுதியாக விலகிச் செல்வதற்குள் தன்னை மீண்டும் பிடிக்க முயன்ற ஒருவரை அப்பெண் அறைந்ததையும் அந்த வீடியோ காட்டுகிறது.

இந்த சம்பவத்தில் அப்பெண் முழுமையாக நனைந்து கிட்டத்தட்ட அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தாள்.

உள்ளூர் புலனாய்வு மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும், அவர்கள் ஜப்பான் தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு