கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு!

ஆசிரியர் - Editor I
கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு!

கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியில் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது. 

மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நித்தியநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சக்திவேல் யசோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் மரணங்கள் அதிகரித்து செல்வதுடன் மூன்று நாட்களுக்கு முன்னர் 

வவுனியா குட்செட் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் உயிரிழந்த முறையில் சடலமாக மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு