நஞ்சருந்தியதற்கான ஆதாரங்கள் இல்லை! சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பிவைப்பு, தீவிர விசாரணை தொடர்கிறது...

ஆசிரியர் - Editor I

வவுனியா - குருமன்காடு குட்செட் வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து இளம் கணவன், மனைவி மற்றும் இரு குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் சடலங்கள் மீதான சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனை அறிக்கை வெளியாகியிருக்கின்றது. 

இந்தப் பரிசோதனையின் முடிவில் உடலில் நஞ்சருந்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை. மரணித்தவர்களினது இரத்தம், சிறுநீர் மாதிரிகளும் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன் மாதிரிகளுக்கான பரிசோதனை முடிவு வந்ததன் பின்னரே மரணத்திற்கான காரணம் என்னவென தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியும் என சட்டவைத்திய பரிசோதனை அறிக்கையுள்ளது. 

வவுனியா குட்செட்வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் பொலிசாரால் நேற்றுமுன்தினம் (7) மீட்கப்பட்டிருந்தது. 

குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42), வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், 

அவரது மனைவியான கௌ.வரதராயினி (வயது 36), இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது9) , கௌ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டனர். 

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா பொலிஸார் மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

குறித்த சம்பவம் வவுனியாவில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு