தமிழ்தேசிய விரோதிகளின் விருப்பத்தை நிறைவேற்றானர் சுரேஷ் பிறேமச்சந்திரன்.

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய விரோதிகளின் விருப்பத்தை நிறைவேற்றானர் சுரேஷ் பிறேமச்சந்திரன்.

தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பலமானதும், கொள்கை பற்றுள்ளதுமான எதிரணி ஒன்று உருவாவதை விரும்பாத இலங்கை அர சாங்கத்தினதும், சில வெளிநாடுகளினதும் எண்ணத்திற்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் செயல்வடிவம் கொடுத்துள்ளார். மேற்கண்டவாறு தமி ழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருக்கின்றார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் க லந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த நவம்பர் மாதம் 12ம் திகதி தமிழ் மக்கள் பேரவையில் நடைபெற்ற சந்திப்பில் தமிழ்தேசிய கூட்ட

மைப்புக்கு எதிரான பலமான அணி ஒன்று உருவாக்கப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய தமிழ்தேசிய மக்கள் முன்னணி யும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் இணைந்து பொது கூட்டணி ஒன்றை உருவாக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய ந வம்பர் மாதம் 16ம் திகதி சுரேஸ் பிறேமச்சந்திரன் புதிய கூட்டணியை பதிவு செய்வது தொடர்ப

hக தேர்தல் திணைக்களத்துடன் பேச சொன்னார். அப்படியே பேசினோம். இதன்போது புதிய தேர்தல் கூட்டணியை நவம்பர் மாதம் 27ம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்யவேண்டும் என தேர்தல் திணைக்களம் கூறியது. அதற்கமைய சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு விடயத்தை கூறினோம். அவர் தன்னுடைய ஆவணங்களை பெற நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆ

னந்தனுடன் தொடர்பு கொள்ள சொன்னார். நாங்கள் அப்படியே தொடர்பு கொண்டோம். ஆனால் ஆவணங்கள் எவையும் தரப்படவில்லை. பின்னர் 19ம் திகதி இந்தியாவிலிருந்து திரும்பிய சுரேஸ் பிறேமச்சந்திரன் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொ ள்ள எம்மை ஒத்துழைக்க வைக்குமாறு தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் சிலருடன் 

பேசினார். இதற்கமைய19ம் திகதி தமிழ்தேசிய மக்கள் முன்னணி கூடி பேசியதற்கு இணங்க தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைவது கடினம் என தீர்மானித்தோம். அந்த நாள் இரவு 11.05 மணிக்கு சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு தொலைபேசி ஊடாக குறுந்தகவல் ஒன்றை அனுப்பினேன். அதில் தமிழ் மக்கள் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்;மானத்திற்கு முரணாக செ

யற்படுகிறீர்கள் என கூறியிருந்தேன். அதற்கு 20ம் திகதி காலை சுரேஸ் பதில் வழங்கினார். அதில் பதிவு நடவடிக்கைகளை தொடருங்கள் எனவும் தனது கட்சியில் உள்ள சிலர் எதிர்கிறார்கள். அவர்களுடன் பேசி இணக்கப்பாட்டை உண்டாக்கலாம் என கூறினார். பின்னர் அவர் களுடன் தொடர்பு இல்லை. மீண்டும் 28ம் திகதி தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் சிலரி

ன் ஊடாக எங்களை சந்திக்க கேட்டார். அதற்காக அன்று இரவு சந்தித்தோம். அப்போதும் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைவது சாத்தியமற்றது என்பதை தெளிவாகவே கூறினோம். அப்போது காணப்பட்ட இணக்கப்பாட்டினடிப்படையில் மீண்டும் 29ம் திகதி கொழும்பு சென்று தேர்தல் ஆணையாளரை சந்தித்தபோது பொது சின்னத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்

டது. ஆனால் புது பெயர் ஒன்று தொடர்பாக 30ம் திகதிக்கு பின்னர் சொல்வதாக கூறினார். இதன் பின்னர் எந்த பேச்சும் இல்லாமல் சுரேஸ் பிறேமச்சந்திரன் விலகினார். ஆகவே தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பலமாகதும், கொள்கை பற்றுள்ளதுமான எதிரணி ஒன்றை வி ரும்பாத தமிழ்தேசிய அரசியல் விரோதிகளின் விருப்பத்தை அவர் நிறைவேற்றிவிட்டார் என

கூறினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு