நடத்தையில் சந்தேகம்!! -மனைவியை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் போட்ட கணவன்-

ஆசிரியர் - Editor II
நடத்தையில் சந்தேகம்!! -மனைவியை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் போட்ட கணவன்-

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்த பவன் தாக்கூர் என்பவர் தனது மனைவி சாஹு என்பவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவருடன் சண்டை போட்டுள்ளார்.

மீண்டும் சண்டை ஏற்படவே ஆத்திரத்தில் மனைவியைக் கொன்ற பவன் தாக்கூர், உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளார். 

இதனிடையே, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அயல் வீட்டார் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு தெரிவித்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து பொலிஸார் ஆய்வு செய்தபோது, தண்ணீர் தொட்டியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி மறைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. 

பின்னர் பவன் தாக்கூரை கைது செய்த பொலிஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு