மேக்கப் போட்டபோது திடீரென வீங்கிய மணப்பெண் முகம்!! -அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை-

ஆசிரியர் - Editor II
மேக்கப் போட்டபோது திடீரென வீங்கிய மணப்பெண் முகம்!! -அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை-

மேக்கப் போட்ட மணப்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் திருமணமே நிறுத்தப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் குறித்த மாநிலத்தில் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் ஒரு இளைஞருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. 

கடந்த வாரம் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது, திருமணம் 2 ஆம் திகதி அதாவது நேற்று முன்தினம்தான் நிச்சயிக்கப்பட்டிருந்தது. 

அரிசிகெரேயில் திருமணத்துக்கான ஏற்பாடுகளும் ஏற்பாடாகி கொண்டிருந்த வேளையில் அதற்கு 2 நாட்களுக்கு முன்பு, மேக்கப் போட முடிவு செய்தார். இதற்காக அழகு நிலையம் ஒன்றிற்கு சென்றிருந்தார். 

திருமணத்திற்கு 2 நாட்கள் இருப்பதால் புதிய யுக்தியை பயன்படுத்தி வித்தியாசமாக மேக்கப் போட வேண்டும் தன்னுடைய விருப்பத்தை அழகு கலைநிபுணரிடம் கங்காவிடம் சொல்லியுள்ளார். 

உடனே கங்கா, தான் புதிய வகையிலான மேக்கப் முறையை கற்றுக் கொண்டுள்ளதாகவும், அதை இப்போது முயற்சி செய்கிறேன் என்றும் சொல்லி கூறியதால் புதிய வகை மேக்கப் போட மணப்பெண் அனுமதித்துள்ளார். 

அதன் பின் முதலில் மணப்பெண் முகத்தில் புதிய வகை கிரீமை வைத்து தேய்த்துள்ளார்.

அதற்கு பின், முகத்தை மூடி சுடு தண்ணீராலான நீராவியில் 'ஸ்டீம்' செய்துள்ளனர்.

வெந்நீரில் ஆவி கொஞ்ச நேரத்தில் மணப்பெண்ணின் முகம் திடீரென கருமை நிறமாக மாறியது.

ஆவி முகத்தில் பட்டதுமே, அவருக்கு எரிச்சல் வந்துவிட்டது. இதனால் முகம் வெந்து தீக்காயங்கள் போன்ற கொப்புளங்கள் வந்துவிட்டன. அடுத்து, கண்களும், கன்னமும் சிவப்பு நிறத்தில் வீங்கியது.

இதையடுத்து மணப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு