“வடக்கின் நுழைவாயில்..” யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை நாளை மறுதினம் ஆரம்பம்...

ஆசிரியர் - Editor I
“வடக்கின் நுழைவாயில்..” யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை நாளை மறுதினம் ஆரம்பம்...

“வடக்கின் நுழைவாயில்..” சர்தேச வர்த்தக சந்தை 13வது தடவையாக யாழப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. 

இது குறித்து யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் குலரட்ணம் விக்னேஸ் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், 

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 13 ஆவது தடவையாகவும் நாளை மறுதினம் 3ம் திகதி தொடக்கம் 5ம் திகதிவரை நடைபெறவுள்ளது. 

கொழும்பின் பிரபல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களையும் இணைத்து யாழ்ப்பாணத்தில் இந்த சந்தை நடைபெறவுள்ளது. 

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை தெற்கு தொழில் முயற்சியாளர்களுடன் இணைந்து தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் தொழில் நுட்பரீதியில் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும். 

பல வருடகாலமாக வடக்கின் கைத்தொழில் துறை வளர்ச்சி மற்றும் சந்தைவாய்ப்பில் இருந்த பாரிய இடைவெளிகள் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் கண்காட்சிகள் மூலம் குறைக்கப்பட்டுள்ளது. 

250 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ள நிலையில் கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக சுமார் 15 ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள். 

சுமார் 45 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் பேர் வரை பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கிறோம்.

பாடசாலை சீருடையுடன் வருகைதரும் மாணவர்கள் குறித்த கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடுட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு