பெற்றோர் கூறிய அந்த வார்த்தை!! -5 வருட காதலியை கொடூரமாக கொன்ற இளைஞர்-

ஆசிரியர் - Editor II
பெற்றோர் கூறிய அந்த வார்த்தை!! -5 வருட காதலியை கொடூரமாக கொன்ற இளைஞர்-

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், இளைஞர் ஒருவர் தனது காதலியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாநிலம் டோம்லூரில் பணியாற்றி வந்த தினகர் (வயது 28) என்பவர் ஆந்திராவின் காக்கிநாடாவைச் சேர்ந்த லீலா என்ற இளம்பெண்ணும் 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

லீலா கர்நாடகாவின் முருகேஷ்பால்யாவில் பணியாற்றி வந்தார். இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, சாதியை காரணம் காட்டி அவர்களின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த தினகர், தனது காதலியை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில், செவ்வாய்கிழமை வேலை முடிந்து வெளியே வந்த லீலாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினகர் சரமாரியாக குத்தியுள்ளார். கழுத்து, மார்பு, வயிறு என பலத்த காயம் ஏற்பட்டதால் லீலா ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதையடுத்து தினகர் அங்கிருந்து தப்பியோடினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் விரைந்து சென்று லீலாவை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், லீலாவின் உடலைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு