நான் கதாநாயகர்களின் அறைகளுக்கு செல்லாததால் ஒதுக்குகிறார்கள்!! -நடிகை கங்கனா ரணாவத் பரபரப்பு தகவல்-

ஆசிரியர் - Editor II
நான் கதாநாயகர்களின் அறைகளுக்கு செல்லாததால் ஒதுக்குகிறார்கள்!! -நடிகை கங்கனா ரணாவத் பரபரப்பு தகவல்-

நான் கதாநாயகர்களின் அறைகளுக்குச் செல்வதில்லை. கிசுகிசுக்களில் சிக்குவதில்லை. இதனால் என்னை திரைத்துறையில் இருந்து ஒதுக்கிறார்கள் என்று பாலிவுட் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது ஹீரோக்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து கங்கனா ரணாவத் கூறும்போது:-

நான் யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன். மதிப்பு குறைவான எந்த காரியத்தையும் செய்யக் கூடாது என்று எனது தாயார் கற்றுக்கொடுத்து இருக்கிறார். இது ஆணவமா அல்லது நேர்மையா என்று சொல்லுங்கள். 

நான் மற்ற பெண்கள்போல் கிசுகிசுக்கள் எதிலும் சிக்குவது இல்லை. எனது தாயார் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையோடு வாழ கற்றுக்கொடுத்து இருக்கிறார். 

அதனால்தான் நான் கிசுகிசுக்களில் சிக்குவது இல்லை. மற்றவர்களைப்போல் ஹீரோக்கள் அறைகளுக்கு செல்வது இல்லை. இதனால் இந்தி சினிமா மாபியாக்கள் என்னை தனிமைப்படுத்தி ஒதுக்குகிறார்கள் என்றார்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு