ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை!! -நள்ளிரவில் நடந்த சோகம்-

ஆசிரியர் - Editor II
ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை!! -நள்ளிரவில் நடந்த சோகம்-

திருமணம் முடிந்த பின்னர் நடந்த விருந்தில் ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற நபருக்கு கடந்த 23 ஆம் திகதி செல்வி என்ற பெண்ணுடம் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து 24 ஆம் திகதி பிரகாஷ் தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு விருந்திற்காக சென்றுள்ளார், அங்கு பரிமாறப்பட்ட ஆட்டு இறைச்சி விருந்தை சாப்பிட்டு விட்டு, கணவன், மனைவி இருவரும் கண்ணவேலம்பாளையம் திரும்பி விட்டனர்.

இந்நிலையில், இரவு நேரத்தில் தூங்கி கொண்டு இருந்த பிரகாஷ்க்கு திடீரென ஒவ்வாமை ஏற்பட்டு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி செல்வி மற்றும் குடும்பத்தினர், அவரை உடனடியாக பெருந்துறை அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

ஆனால் உடலில் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக துரதிஷ்டவசமாக பிரகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு