யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைய முயற்சித்த வன்முறை கும்பல் காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சி! பொருட்களை உடைத்து அட்டகாசம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைய முயற்சித்த வன்முறை கும்பல் காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சி! பொருட்களை உடைத்து அட்டகாசம்...

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த முயன்ற வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம் உள்ள நுழைவாயிலுக்கு அருகில் பட்டா வாகனத்தில் வந்த சிலர் கதவால் ஏறி குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முற்சித்துள்ளனர். 

இதனை அவதானித்த வைத்தியசாலை காவலாளி அவர்களை தடுக்க முயன்றபோது காவலாளி மீது தாக்குதல் நடத்த முயன்றதுடன், அவர்கள் வந்த பட்டா வாகனத்திலிருந்து வாளை எடுத்து காவலாளியை வெட்ட முயற்சித்ததுள்ளனர். இதனையடுத்து சுதாகரித்துக் கொண்ட காவலாளி அவர்களை தடுக்க முயன்ற நிலையில், 

அங்கிருந்த கதிரை, மேசை போன்றவற்றை வாளால் வெட்டி சேதப்படுத்திய வன்முறை கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு