யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து மோதி குடும்பஸ்த்தர் பலி!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து மோதி குடும்பஸ்த்தர் பலி!

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து மோதியதில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று காலை யு -9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. துவிச்சக்கர வண்டியில் குடும்பஸ்தர் ஒருவர் பயணித்துள்ளார். 

இதன்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற தனியார் பேருந்து ஒன்று மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக துவிச்சக்கரவண்டியில் பயணித்த 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் படுகாயமடைந்து 

வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 

குறித்த விபத்து தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, இ.போ.சபை மற்றும் தனியார் பேரூந்து என்பன போட்டிக்கு ஓடியதால் குறித்த விபத்து இடம்பெற்றதாக 

விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு