பாரவூர்தி மோதியதில் முதியவர் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
பாரவூர்தி மோதியதில் முதியவர் உயிரிழப்பு..

பாரவூர்தி மோதியதில் 58 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், கிளிநொச்சி - புளியம்பொக்கணை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 

பரந்தன் முல்லைத்தீவு வீதியில் நெல் உலர விடப்படும் நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில், புளியம்பொக்கணை பகுதியில் இருந்து கண்டாவளை நோக்கி பயணித்த முதியவர் மீது பரந்தன் பகுதியில் இருந்து 

நெல் கொள்வனவுக்காக புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த பாரஊர்தி மோதியுள்ளது. இவ்விபத்தில் வட்டகச்சி பகுதியைச் சேர்ந்த கதிரவேலு யாதவராசா (வயது 58) 

என்ற 6பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்து சில நாட்களிற்கு முன்னர் பரத்தன் பூநகரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மக்கள் பயன்பாடு உள்ள பிரதான வீதிகளில் நெல் உலர்த்தப்படுவதால் இவ்வருடம் கிளிநொச்சியில் இடம்பெற்ற 2வது விபத்து மரணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு