யாழ்.ஊர்காவற்றுறையில் எரிந்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊர்காவற்றுறையில் எரிந்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!

யாழ்.ஊர்காவற்றை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிந்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

குறித்த பெண்கள் இருவரும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும், தனியாக வசித்து வந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது. 

அவர்களது சடலத்திற்கு அருகாமையில் தீப்பெட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொலையா தற்கொலையா என இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் கூறகின்றனர்.

இச்சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு