பிரியாணி கடைகளில் ஆட்டிறைச்சியுடன் பூனை இறைச்சியும் கலந்து விற்பனை!! -மீட்கப்பட்ட பூனைகள் தனியார் காப்பகத்தில் ஒப்படைப்பு-

ஆசிரியர் - Editor II
பிரியாணி கடைகளில் ஆட்டிறைச்சியுடன் பூனை இறைச்சியும் கலந்து விற்பனை!! -மீட்கப்பட்ட பூனைகள் தனியார் காப்பகத்தில் ஒப்படைப்பு-

சென்னையில் வீதொயோரமாக உள்ள சில பிரியாணி கடைகளில் ஆட்டு இறைச்சியுடன் பூனை இறைச்சியும் கலக்கப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது. 

அவர்கள் சென்னை பாரிமுனை சுற்றுப்புறப் பகுதியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புகளில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பூனைகள் கழுத்தில் மணி கட்டப்பட்டு அலங்காரத்துடன் இருந்துள்ளது. வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் திருடப்பட்டு கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 11 பூனைகளை ஏழு கிணறு பொலிஸாரின் உதவியோடு மீட்டனர். 

மீட்கப்பட்ட 11 பூனைகள் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா அம்மம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் விலங்கு பாதுகாப்பு நிறுவனர் ஸ்ரீராணியிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது. 

சென்னையில் பல பகுதிகளில் உள்ள நரிக்குறவர்கள் பூனைகளை பிடித்து ஒரு பூனையை 1000 ரூபாக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கருப்பு பூனைகளை பிடித்து அதன் ரத்தத்தையும் விற்பனை செய்து வருகின்றனர். 

இந்த விலங்குகள் பாதுகாப்பு அமைப்பில் பூனைகள் மட்டுமல்லாது மாடுகள், குதிரைகள், நாய், ஒட்டகம், கோழி, வாத்து, உள்ளிட்டவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு