யாழ்.நெடுந்தீவில் வாடி தீக்கிரை, 15 லட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவில் வாடி தீக்கிரை, 15 லட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்..

யாழ்.நெடுந்தீவில் பாக்கியநாதர் எயுசேவியர் என்பவரின் வாடியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

அதன்போது வாடியினுள் இருந்த கடற்தொழில் உபகரணங்கள் உள்ளிட்ட சுமார் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் நெடுந்தீவு 2ஆம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிடும் பாக்கியநாதர் எயுசேவியர் என்பவரின் வாடியே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு