கணவன், மாமியாரை கொன்று குளிர்சாதன பெட்டியில் போட்ட பெண்!! -காதலனுடன் இணைந்து செய்த கொடூர செயல்-

ஆசிரியர் - Editor II
கணவன், மாமியாரை கொன்று குளிர்சாதன பெட்டியில் போட்ட பெண்!! -காதலனுடன் இணைந்து செய்த கொடூர செயல்-

அசாமில் வந்தனா கலிதா என்ற பெண் தனது கணவன் மற்றும் மாமியாரை கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்து இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாமின் நூன்மதியில் வசிக்கும் வந்தனா கலிதா என்ற பெண் தனது கணவர் மற்றும் மாமியாரை கொன்று, அவர்களின் உடலை வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்துள்ளார்.

கணவர் அமர்ஜோதி டே மற்றும் மாமியார் சங்கரி டேயின் உடல்களை துண்டு துண்டாக வெட்டுவதற்கு முன்பு வந்தனா அவர்களை கொலை செய்துள்ளார், பின்னர் அவர்களின் உடல் உறுப்புகளை குளிர்சாதன பெட்டியில் 3 நாட்கள் வரை மறைத்து வைத்து இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன் வந்தனா கலிதாவுக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்ததாகவும், வந்தனா கலிதா அவரது காதலருடன் இணைந்து உடல் உறுப்புகளை குவஹாத்தியில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள மேகாலயாவின் சிரபுஞ்சிக்கு எடுத்துச் சென்று மறைவான இடத்தில் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு