புகைரத கடவையை கடக்க முயன்ற இ.போ.ச பேருந்து யாழ்ராணி புகைரதம் மீது மோதி கோரவிபத்து!

ஆசிரியர் - Editor I
புகைரத கடவையை கடக்க முயன்ற இ.போ.ச பேருந்து யாழ்ராணி புகைரதம் மீது மோதி கோரவிபத்து!

யாழ்.காங்கேசன்துறையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த யாழ்ராணி புகைரதம் மீது இ.போ.ச பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த சம்பவம் இன்று காலை 8.10 மணியளவில் அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

பாதுகாப்பற்ற புகைரத கடவையை கடக்க முயன்ற இ.போ.ச பேருந்து ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தின்போது அருகில் தரித்துநின்ற யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தின் பீடாதிபதியுடைய வாகனம் மீதும் பஸ் மோதியுள்ளது. 

இதனால் பீடாதிபதியின் கார் முன்பகுதி சேதமடைந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு