சடுதியாக வீதியின் குறுக்கே ஓடிய நாய், கட்டுப்பாட்டை இழந்து வீதியால் நடந்து சென்றோர் மீது மோதிய கார்! 13 வயது சிறுமி மரணம், சிறுமியின் தாய் உட்பட இருவர் காயம்..

ஆசிரியர் - Editor I
சடுதியாக வீதியின் குறுக்கே ஓடிய நாய், கட்டுப்பாட்டை இழந்து வீதியால் நடந்து சென்றோர் மீது மோதிய கார்! 13 வயது சிறுமி மரணம், சிறுமியின் தாய் உட்பட இருவர் காயம்..

சடுதியாக வீதிக்கு குறுக்கே ஓடிய நாயினால் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் 13 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

மேற்படி விபத்து ஏ - 9 வீதியில் பூனாவ பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். 

வீதியின் குறுக்காக சென்ற நாய் ஒன்றுடன் மோதுவதை தவிர்க்க முயற்சித்த நிலையில், சாரதி விபத்தை கட்டுப்படுத்தும் விதமாக வாகனத்தை செலுத்தியபோது வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது 

கட்டுப்பாட்டையிழந்து மோதி விபத்துக்குள்ளானது.குறித்த விபத்தில் அப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், அவரது தாயார் மற்றும் கார் சாரதி ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

மரணமடைந்த சிறுமியின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து குறித்து பூனாவ பொலிசார் விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு