கிளிநொச்சி - கனகபுரத்தில் தங்க பிஸ்கட் தயாரிக்கப்படுவதாக கிடைத்த இரகசிய தகவல், சுற்றிவளைத்த அதிரடிப்படையினருக்கு அதிர்ச்சி, இருவர் கைது...

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி - கனகபுரத்தில் தங்க பிஸ்கட் தயாரிக்கப்படுவதாக கிடைத்த இரகசிய தகவல், சுற்றிவளைத்த அதிரடிப்படையினருக்கு அதிர்ச்சி, இருவர் கைது...

தங்க பிஸ்கட்டுகள் தயாரிக்கப்படுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 42 போலி தங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (17) மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. 

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு