தலையில்லாமல் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!!

ஆசிரியர் - Editor II
தலையில்லாமல் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தலை இல்லாமல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறித்த மாநிலத்தின் பால்கர் மாவட்டம் விரார் அருகே பாபட் கிண்ட் மலைப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தலை மற்றும் இடது கால் இல்லாமல் அந்த சடலம் கிடந்துள்ளது.

அழுகிய நிலையில் கிடந்த அந்த உடலை மீட்ட பொலிஸார், காணாமல் போனதாக யாராவது முறைப்பாடு செய்தார்களா என்பதை ஆய்வு செய்தனர்.

அப்போது கடந்த மாதம் 29 ஆம் திகதி ஆதர்ஷ் பாண்டே என்ற 24 வயது இளைஞர் கானாமல் போனதாக மிறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொலிஸார், அவரது பெற்றோரை வரவழைத்தனர். அதன் பின்னர் உடலை அடையாளம் காட்டிய அவர்கள், அது தங்கள் மகன் ஆதர்ஷ் தான் என்பதை உறுதி செய்தனர். 

இதனையடுத்து அவரது தலை மற்றும் இடது காலினை தேடி வரும் பொலிஸார், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வனவிலங்குகள் ஏதேனும் தாக்கியதில் இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னர் தான் உண்மை தெரிய வரும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு