யாழ்.அத்தியடியில் பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது! சமூகத்தை குறித்து இழிவாக பேசியதால் அடித்ததாக வாக்குமூலம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.அத்தியடியில் பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது! சமூகத்தை குறித்து இழிவாக பேசியதால் அடித்ததாக வாக்குமூலம்...

யாழ்.அத்தியடி பகுதியில் 55 வயதான பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சமுக பாகுபாட்டை சுட்டிக்காட்டி பேசியதனால் ஏற்பட்ட சடுதியான கோபத்தினால் பெண்ணை தாக்கியதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கினார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.மாநகர் - அத்தியடி பகுதியில் 55 வயதுடைய தாய் 

கடந்த 11ம் திகதி இரவு அடித்து கொலை செய்யப்பட்டார்."கணவனை பிரிந்து வாழும் அவர் பெண் பிள்ளை ஒருவருடன் வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு வேலைகளுக்காக ஒருவர் நீண்டகாலமாக தினமும் வருவது வழமை. 

11ம் காலையும் அவர் வழமைபோல வருகை தந்துய இரவு வரை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். குடும்பப்பெண்ணுடன் அவர் முரண்பட்டு வாய்த்தக்கம் செய்துள்ளார். வீட்டுக்குள் இருந்த பெண் பிள்ளை சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது

 வேலை செய்து கொண்டிருந்தவரை காணவில்லை் தாயார் குருதி தோய்ந்த நிலையில் நிலத்தில் சரிந்து காணப்பட்டார்" என்று பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்தது.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்து தலைமறைவாகிய நபர் 

நாவற்குழியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபர் நேற்று காலை கைது செய்யப்பட்டார். "உயிரிழந்த பெண்ணுடன் 10 ஆண்டுகளாக நட்பு உறவாடி வருகின்றேன். அவர்கள் வீடு மாறுவதற்கு உதவுவதிலிருந்து பல உதவிகளை செய்தேன்.  

அண்மையில் கோப்பாயில் ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு அவரது காணி ஒன்றை விற்பனை செய்து பணத்தையும் வழங்கினேன். தண்ணீர் குழாயை நிலத்துக்கு அடியால் புதைப்பதற்காக கிடங்கு வெட்டச் சொன்னார். 

எனது வீட்டில் கூலிக்கு வேலைக்கு போவதாக அறிந்தால் பிரச்சினை என நான் கூறியபோது, அவர் என்னை சமுக வேறுபாடு சொல்லி பேசிவிட்டார். அதனால் ஆத்திரமடைந்து அவரை கட்டையால் தாக்கிவிட்டேன். 

அவர் உயிரிழந்துவிட்டார்" என்று சந்தேக நபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு