இந்திய இழுவை படகுகளால் பாதிக்கப்பட்ட எமக்கு இழப்பீடு வழங்குங்கள் யாழ்.இந்திய துணை துாதுவருக்கு கடிதம்..!

ஆசிரியர் - Editor I
இந்திய இழுவை படகுகளால் பாதிக்கப்பட்ட எமக்கு இழப்பீடு வழங்குங்கள் யாழ்.இந்திய துணை துாதுவருக்கு கடிதம்..!

இந்திய இழுவைப் படகுகளால் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு இழப்பீடு வழங்ககோரி யாழ்.காரநகர் பிரதேசசபை தவிசாளர் பாலச்சந்திரனால் யாழ்.இந்திய துணை துாதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது. 

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, காரைநகர் மீனவர்கள் பிரச்சனைகாரைநகர் கடற்பிரதேசத்தில் கடந்த வாரம் 3 மீனவர்களுடைய 11 இலட்ச பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டு முழுமையாக சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு இந்திய மீனவர்கள் பொறுப்பாளிகள் என பாதிக்கப்பட்ட மீனவர்களும் கடற்தொழிலாளர் சங்க தலைவரும் தெரிவிக்கின்றார்கள். இந்திய தமிழக உறவுகளுக்கும் எமக்கும் உள்ள புரிந்துணர்விலும், 

உறவிலும் இது விரிசலை ஏற்படுத்துவதால் இது சம்பந்தமாக உரியவர்களிடம் தெரிவித்து தீர்வை காணுமாறும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈட்டைப் பெற்றுத் தருமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு