யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்!

யாழ்.வடமராட்சி கிழக்கு - குடாரப்பு பகுதியில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ள நிலையில் காணாமல்போன மீனவருடைய சடலமே அது என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

கரிதாஸ் வீதி வள்ளிபுனம் பகுதியைச் சேரந்த மீனவனே சடலமாக கரையொதுங்கியுள்ளார்.

யாழ் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியி கடற்கரையில் இருந்து தெப்பத்தில் கடற்றொழிலுக்காக கடந்த ஞாயிறு மாலை சென்றிருந்தார்.

இருவர் தொழிலுக்குச் சென்ற நிலையில் தெப்பம் கடலில் மூழ்கியுள்ளது. இதன்போது ஒரு மீனவன் நீந்தி கரைசேர்ந்துள்ள நிலையில் கு

றித்த மீனவன் கடலில் மூழ்கி காணமல்ப் போயுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை குடாரப்பு பகுதியிலேயே சடலம் கரையோதுங்கியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.சிவராசா மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு