யாழ்.சாவகச்சோி - புத்துார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி பலி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி - புத்துார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி பலி..!

யாழ்.சாவகச்சோி - புத்துார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 20 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார். 

வீதியின் குறுக்காக இரும்பு கூடு கொண்டு சென்றவர்களுடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியை சேர்ந்த விஜயரத்தினமூர்த்தி டுவிசன் (வயது 20) என்பவரே உயிரிழந்துள்ளார். 

கடந்த திங்கட்கிழமை அச்சுவேலியில் இருந்து தனது நண்பனுடன் கொடிகாமத்திற்கு சென்று விட்டு, சாவகச்சேரி - புத்தூர் வீதியூடாக 

மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை, வீதியின் குறுக்காக இரும்பு கூட்டினை கொண்டு சென்றவர்களுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானர்கள். 

விபத்தில் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 

 சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு