வீட்டில் படுத்துறங்கிய மேசன் தொழிலாளியான இளம் குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
வீட்டில் படுத்துறங்கிய மேசன் தொழிலாளியான இளம் குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு!

வேலை முடிந்து வீட்டுக்குவந்து படுத்துறங்கிய இளம் குடும்பஸ்த்தர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் இம்பெற்றுள்ளது. மேசன் தொழிலாளியான குறித்த நபர் நேற்று வேலை முடித்துவிட், 

வீட்டில் படுத்து உறங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முருகன் இரத்தினகுமார் என்ற 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே 

இவ்வாறு இறந்த நிலையில் இனங்காணபட்டுள்ளார். மனைவி பிள்ளைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் தனிமையில் படுத்துறங்கிய நிலையில் 

இவ்வாறு சடலமாக இனம் காணப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிய விசாரணைகளை 

மேற்கொண்டு வரும் நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு