யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையம் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையம் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பு..!

இந்தியா உதவி திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசசார மத்திய நிலையம் “யாழ் பட்டினத்தின் கலாச்சார மண்டபம்” என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 200 கோடி இலங்கை ரூபாய் மதிப்பில் இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தின் பணிகள் கலை கலாச்சார நிகழ்வுகளுடன் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் இலங்கைக்கான இந்தியா தூதுவர் பாக்லே, இந்தியா மத்திய அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் டாக்ஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை, 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர் அங்கஜன் இராமநாதன், அரச உயர் அதிகாரிகள் தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு