யாழ்ப்பாணத்தில் இன்று நடக்கும் சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்க தமிழ் கட்சிகள் சில தீர்மானம்! எதிர்ப்பு போராட்டத்திற்கு மாணவர் ஒன்றியம் முஸ்தீபு...

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் இன்று நடக்கும் சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்க தமிழ் கட்சிகள் சில தீர்மானம்! எதிர்ப்பு போராட்டத்திற்கு மாணவர் ஒன்றியம் முஸ்தீபு...

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறும் சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிக்க சில தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன. 

குறிப்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆகியன தமது நிலைப்பாட்டினை அறிவித்துள்ளன. 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளது. 

நிகழ்வுக்கு சகல தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி இரு கட்சிகளும் அழைப்பை நிராகரித்து தாம் புறக்கணிப்பதாக அறவித்திருக்கின்றன. எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பு எதனையும் கூறவில்லை. 

இதேவேளை தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆகியன சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்திற்கு 

அழைப்பு விடுத்துள்ளன. தமிழ்தேசிய மக்கள் முன்னணி யாழ்.நகரிலும், மாணவர் ஒன்றியம் யாழ்.பல்கலைகழக முன்றலிலும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு