யாழ்.மாநகருக்குள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்த நீதிமன்றம் தடை!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகருக்குள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்த நீதிமன்றம் தடை!

யாழ்.மாநகரில் இன்று சனிக்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை கட்டளை வழங்கியுள்ளது.

யாழ்.தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விண்ணப்பத்துக்கு இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கிறார். இந்த நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த போராட்டத்துக்கு தடை உத்தரவு கோரி யாழ்.நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு