யாழ்.நகரை அண்டிய பகுதியிலுள்ள பாழடைந்த வீட்டிலிருந்து 10 பேர் கைது!!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரை அண்டிய பகுதியிலுள்ள பாழடைந்த வீட்டிலிருந்து 10 பேர் கைது!!

யாழ்.நகரை அண்டியுள்ள பகுதியிலுள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

பாழடைந்த வீடு ஒன்றில் கூடி ஊசி மூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டிருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான 

மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கைது நடவடிக்கை முன்னெடுத்தனர். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை 

யாழ்.நீதிவான் நீதிமன்றின் கட்டளை பெற்று மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு