யாழ்ப்பாண மக்களை சந்திக்கும் வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன்..! இந்திய மத்திய அமைச்சர்...

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாண மக்களை சந்திக்கும் வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன்..! இந்திய மத்திய அமைச்சர்...

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் நாம் அறிந்துள்ள நிலையில் இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய கப்பல்துறை, விலங்கு, வேளாண்மை, பால் உற்பத்தி அமைச்சர் வேல்முருகன் கூறியுள்ளார். 

நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக வருகை தந்து யாழ்.பொது நூலகத்தில் பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

அமைச்சராக இலங்கைக்கு வருகைதந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். யாழ்ப்பாண மக்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தமை பெருமையாக கருதுகிறேன். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியா நன்கு அறிந்து வைத்துள்ளது. அதன் காரணமாகவே இலங்கையில் உள்ள இந்தியா தூதரகம் ஊடாக 

இலங்கை மக்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகமும் இங்கு வாழும் மக்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்கிய நிலையில் தொடர்ந்து உதவிகளை வழங்கும். ஆகவே இந்திய அரசு இலங்கை மக்களுடன் தொடர்ந்தும் 

தனது உறவை வளர்த்துக் கொள்வதில் அதிக ஈடுபாடு காட்டுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு