ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்.விஜயம் தொடர்பில் கள ஆய்வு..!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்.விஜயம் தொடர்பில் கள ஆய்வு..!

யாழ்.கலாச்சார மத்திய நிலையம் நாளை மறுதினம் 11ம் திகதி இந்திய அரசினால் இலங்கை அரசிற்கு கையளிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வை முன்னிட்டு கலாசார நிலையத்தில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்விற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் களவிஜயம் நேற்று இடம்பெற்றது.

இம் முன் ஏற்பாடுகள் தொடர்பான கள விஜயத்தில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் இணைந்திருந்தார்.

ஜனாதிபதி வருகை உள்ளிட்ட அரங்கேற்ற நிகழ்வுகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து ஏற்பாடுகள் தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டு, 

தேவையான ஏற்பாடுகள் தொடர்பில் இறுதிசெய்யப்பட்டது.இக் கள ஆராய்வில் பிரதம செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், வடக்குமாகாண உயர் அதிகாரிகள், 

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், மாநகர ஆணையாளர் 

மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு