யாழ்.இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி சடலமாக மீட்பு!

யாழ்.இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் மனைவியான ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

வாளைச்சேனை - போத்தாளை பகுதியில் இன்று வியாழக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. 

கல்குடா பிரதான வீதி போத்தாளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய சகுந்தலாதேவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியரின் கணவர் யாழ்.இளவாளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவருவதுடன் இவரின் மூன்று பிள்ளைகளும் கொழும்வில் வசிக்கும் நிலையில் ஆசிரியர் தனிமையில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான இன்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கிராமசேவகர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து 

குறித்த வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு யன்னல்கள் உடைந்துள்ளதுடன் உருக்குலைந்த நிலையில் சடலமாக ஆசிரியர் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் 

தடவியல் மற்றும் குற்றதடுப்பு பிரிவின் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு