யாழ்.கல்வியங்காடு மின்சந்தை வியாபாரிகள் 13 பேர் மீது சட்டநடவடிக்கை!

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காடு மின்சந்தை வியாபாரிகள் 13 பேர் மீது சட்டநடவடிக்கை!

யாழ்.கல்வியங்காடு மீன் சந்தையில் அங்கீகரிக்கப்படாத தராசுகளை பயன்படுத்தி வியாபாரம் செய்துவந்த 13 வியாபாரிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் நேற்று திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அங்கு வியாபார நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட தராசுகளை பரிசோதித்தபோது, அளவீட்டு அலகுகள் நியமங்கள் 

மற்றும் சேவைகள் திணைக்களத்தினரால் அங்கீகரிக்கப்படாத, வியாபாரத்திற்கு பயன்படுத்தமுடியாத 13 நிறுக்கும் கருவிகளை பயன்படுத்தியமை. கண்டறியப்பட்டு 

அவர்களுக்கு எதிராக சட்ட திணைக்களத்தினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு