13ம் திருத்தச்சட்டத்திற்கும் அப்பால் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்!! யாழ்ப்பாணத்தில் பௌத்த பிக்குகள் வலியுறுத்தல்...

ஆசிரியர் - Editor I
13ம் திருத்தச்சட்டத்திற்கும் அப்பால் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்!! யாழ்ப்பாணத்தில் பௌத்த பிக்குகள் வலியுறுத்தல்...

13ம் திருத்தச்சட்டத்திற்கும் அப்பால் அதிகாரங்கள் தமிழ் மக்களுடன் பகிரப்படவேண்டும் என யாழ்.மாவட்டத்திற்கு விஜயம செய்துள்ள பௌத்த பிக்குகள் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். 

பௌத்த பிக்குகள் குழு  யாழ்ப்பாணத்தில் இன்று காலை சர்வமத குழுவை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருக்கின்றனர். சந்திப்பின் பின்னர் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது. 

இதன்போது மேலும் அவர்கள் குறிப்பிட்டதாவது, 

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ள நிலையில் 

யாழ்ப்பாணத்தில் பௌத்தப் பிக்குகளின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு