யாழ்.புங்குடுதீவை சேர்ந்த 4 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.புங்குடுதீவை சேர்ந்த 4 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

யாழ்.புங்குடுதீவை சேர்ந்த 4 பேர் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு சென்று தஞ்சமடைந்தருக்கின்றனர். 

இதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) தனுஷ்கோடி அருகே உள்ள ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரைக்கு நள்ளிரவு சென்றடைந்து, 

கடற்கரை அருகே உள்ள மீனவர் குடிசையில் தஞ்சமடைந்தனர்.இதற்கமைய புங்குடுதீவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரே 

இலங்கையில் இருந்து இவ்வாறு சென்றுள்ளனர்.இதனையடுத்து தகவலறிந்து ஒத்தப்படடிக்கு சென்ற தனுஷ்கோடி காவல் நிலைய பொலிஸார்

மற்றும் க்யூ பிரிவு பொலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையிலிருந்து சென்ற அகதிகளின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு