யாழ்.நல்லுாரில் உள்ள தியாகி திலீபனின் நினைவுதுாபி முன்பாக தாலிகட்டி மண வாழ்வில் இணைந்த தம்பதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுாரில் உள்ள தியாகி திலீபனின் நினைவுதுாபி முன்பாக தாலிகட்டி மண வாழ்வில் இணைந்த தம்பதி!

யாழ்.நல்லுாரில் உள்ள தியாகி திலீபனின் நினைவு துாபி முன்பாக தாலி கட்டி திருமண வாழ்க்கையில் இணைந்துகொண்ட தம்பதிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. 

தமிழ் மீதும் தமிழர்களது தியாகத்தின் மீதும் அவர்கள் கொண்ட பற்றினால் அவர்கள் இவ்வாறு திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தா தமிழீசன் மற்றும் போசிந்தா தம்பதியே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

தமிழீசன் தனியார்துறை ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார். அவர்களது திருமணத்திற்கு சமூக ஊடகங்களிலும் நேரிலும் வாழ்த்துக்கள் சொல்வதோடு அவர்களது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு