யாழ்.அரியாலையில் பொலிஸ் உத்தியோகஸ்த்தரும் 29 வயதான பெண் ஒருவரும் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலையில் பொலிஸ் உத்தியோகஸ்த்தரும் 29 வயதான பெண் ஒருவரும் கைது!

யாழ்.அரியாலை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரும் 29 வயதான பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 

மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை ஹெரோயின் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் 

29 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து 

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு