உரிய மருத்துவ தேவைகளை பூர்த்திய செய்ய முடியாமல் அந்தரிக்கும் தீவகம் - புங்குடுதீவு மக்கள்...

ஆசிரியர் - Editor I
உரிய மருத்துவ தேவைகளை பூர்த்திய செய்ய முடியாமல் அந்தரிக்கும் தீவகம் - புங்குடுதீவு மக்கள்...

யாழ்.புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளர்கள் விடுதியில் அனுமதித்து சிகிச்சைக்கு அனுமதிக்காமல் நோயாளர்களின் சம்மதத்தை பெற்றுக்கொண்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்புவதாக வேலணைப் பிரதேச சபை உறுப்பினர் நாவலன் குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கின்றார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ் ) வண்டியும் பழுதடைந்த காரணத்தால் நெடுந்தீவு ,நயினாதீவு , புங்குடுதீவு மக்கள் உயர் பிரியும் நிலையும் ஏற்பட்டுள்ளது. புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு என  2017ல் வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டியினூடாகவே 

நயினாதீவு, நெடுந்தீவு பிரதேசத்தில் வாழ்கின்ற நோயாளிகளை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டுவந்தது. இந்நிலையில் வாகனமானது கடந்த ஏழு மாதங்களாக பழுதடைந்த நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள வாகன திருத்துமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

சுமார் 25 கிலோமீற்றர் தூரத்திலமைந்துள்ள ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்குரிய அம்புலன்ஸ் வண்டியினையே அவசர தேவைகளுக்கு பயன்படுத்துகின்ற சூழ்நிலை காணப்படுகின்றது. அவசர சிகிச்சைக்குரிய நோயாளிகள் பல மணித்தியாலங்கள் கடந்து காத்திருந்தும் 

அம்புலன்ஸ் வருமா என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் அவலநிலை தொடர்ந்தவண்ணமுள்ளது. அதேவேளையில் ஊசி மருந்துகள் , சேலைன் போன்றவற்றுக்குமான பாரிய தட்டுப்பாடு புங்குடுதீவு வைத்தியசாலையில் தொடர்ச்சியாக நிலவிவருகின்றது . 

கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கு சிங்கள மொழி தெரிந்த மருத்துவர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்படுவதால்மொழி தெரியாமல் மருத்துவரும் , நோயாளிகளும் திண்டாடும் துர்ப்பாக்கிய நிலை நிலவுகின்றது. 2016 இல் புங்குடுதீவு உலகமையத்தினரும் கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினரும் இணைந்து ப

ல லட்ச ரூபாய் நிதியுதவியில் நோயாளிகளுக்கான கட்டில்கள் , மின்விசிறிகள் , மருத்துவ உபகரணங்கள் , வைத்தியருக்கான ஆசனங்கள் போன்றவற்றை வழங்கியிருந்தனர் . அத்தோடு நோயாளர் தங்குமிடத்துக்கும் முழுமையாக வர்ணம் பூசப்பட்டது. அதேபோன்று எனது தனிப்பட்ட நிதியுதவி ஊடாகவும் 

பல்வேறு சமூக ஆர்வலர்களினதும் தனிப்பட்ட நிதியுதவியூடாகவும் இவ் வைத்தியசாலைக்கு பல உதவிகள் வழங்கப்பட்டபோதிலும் தற்போதுள்ள வைத்தியர்கள் நோயாளிகளை அங்கு தங்க வைத்து பராமரிப்பதில்லை. கடுமையான சுகவீனம் என்றாலும் பனடோல் போன்ற மருந்துகளைக் கொடுத்துவிட்டு 

சுய விருப்பத்தின் வீடு செல்வதாக ஒரு படிவத்தின் கீழ் கையொப்பம் பெற்றுவிட்டு வீடுகளுக்கு அனுப்பும் அவல நிலை தொடர்ந்தவண்ணமுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே அதி கஷ்டபிரதேசத்தில் வாழும் தீவக மக்களின் சுகாதாரத் தேவையை பூர்த்தி செய்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த விடையம் தொடர்பில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ஆம்புலன்ஸ் திருத்த வேலைக்காக விடப்பட்ட நிலையில் அவசர தேவை ஏற்பட்டால் வேலணை மற்றும் ஊர்காவத்துறை வைத்தியசாலைகளின் ஆம்புலன்ஸ் வண்டியை பயன்படுத்த முடியும்.

மேலும் நோயாளர்களை வைத்திய சாலையில் அனுமதிக்காமல் அவர்களின் சம்மதக் கடிதம் பெற்று வீடுகளுக்கு அனுப்புவது தொடர்பில் தான் ஆராய்வதாக தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு