யாழ்.பருத்தித்துறையில் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளையடித்த நகைகளை அடகு வைப்பதற்குச் சென்றவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளையடித்த நகைகளை அடகு வைப்பதற்குச் சென்றவர் கைது!

சுமார் 17 பவுண் தங்க நகைகளை அடகுவைக்க முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்த நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது, பருத்தித்துறை – திக்கத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு வீடு புகுந்து 17 பவுண் நகைகள் களவாடப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித் துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் திருடிய நகைகளை நெல்லியடிப் பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்க முற்பட்டவேளை 

சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 17 பவுண் நகைகளும் கைப்பற்றப்பட்டன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு