இரு வாள்வெட்டு குழுக்கள் மோதல்.. பொலிஸார் நடாத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..

ஆசிரியர் - Editor I
இரு வாள்வெட்டு குழுக்கள் மோதல்.. பொலிஸார் நடாத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..

யாழ்.சுன்னாகம் பகுதியில இரு குழுக்களுக்கிடை யில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரா ல் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழ ந்துள்ளார்.

இன்று மாலை ஏழாலை குளமன்காடு பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர் குழுக்கள் வாள்களுடன் மோதியுள்ளன. இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சண்டையை கட்டு ப்படுத்த முயன்றுள்ளனர்.

எனினம் நிலமையை கட்டுக்குள் கொண்டுவர இ யலாத நிலையில் பொலிஸார் துப்பாக்கி சூடு நடா த்தியுள்ளனர். இதில் 28வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருடைய சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு ள்ளது.

இதனால் சுன்னாகம் பகுதியில் பதற்றம் நிலவி வ ருகிறது.

2ம் இணைப்பு..

மல்லாகத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - கே.கே.எஸ் வீதி மல்லாகம் மாதா கோவிலடியில் இன்றிரவு சம்பவம் இடம்பெற்றது.

மல்லாகம் குழமங்காடு பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்சன் (வயது 32) என்ற இளைஞனே நெஞ்சில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார் என வைத்தியசாலையில் உறுதிப்படுத்தப்பட்டது.

"தெல்லிப்பளை வைத்தியசாலையில் இடம்பெற்ற திடீர் மரண விசாரணைக்கு பொலிஸார் இருவர் சென்று திரும்பினர்.

அதன்போது வீதியில் இரு கும்பல்களுக்கு இடையே  மோதல் இடம்பெற்றது. அதனைத் தடுக்க முற்பட்ட போது, பொலிஸாரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மற்றொருவரும் படுகாயமடைந்தார்" என்று பொலிஸார் கூறுகின்றனர்.

"சகாய மாதா ஆலயத்தில் பெருநாள் இடம்பெற்றது. அதில் பொதுமக்கள் கூடியிருந்தனர். அதில் கலந்துகொண்டிருந்த இளைஞர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது" என்று பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு