மதுபோதையில் மயங்கிய நபரின் பிறப்புறுப்பை வெட்டிய நண்பர்! மதுபாதையில் நடந்த விபரீதம்...

ஆசிரியர் - Editor I
மதுபோதையில் மயங்கிய நபரின் பிறப்புறுப்பை வெட்டிய நண்பர்! மதுபாதையில் நடந்த விபரீதம்...

மதுபோதையில் நண்பர் பிறப்புறுப்பை வெட்டியதில் படுகாயமடைந்த நபர் மீகஹகியுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதுளை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

சம்பவத்தில் வியலுவ - தல்தென பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே காயமடைந்துள்ளார். நேற்றுமுன்தினம் (30) இரவு அளவுக்கதிகமாக மது அருந்தி குறித்த நபர் மயக்கமடைந்துள்ளார்.

அதன்போது, அவருடன் மது அருந்திய சக நண்பர் கையில் வைத்திருந்த கூரிய ஆயுதத்தினால், மயங்கிக்கிடந்த நபரின் பிறப்புறுப்பை வெட்டியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிறப்புறுப்பு வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் கீழே விழுந்த நபரை அவரது ஏனைய நண்பர்கள் வைத்தியசாலையில் அனுமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை 

பதுளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு