நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்

ஆசிரியர் - Editor II
நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்

கன்னட திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட மன்தீப் ராய் தனது 74 ஆவது வயதில் இன்று உயிரிழந்ததார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு, தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மாரடைப்பால் காலமானார். 

மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருவுக்கு புலம் பெயர்ந்த அவர், பின் கன்னட திரை துறையில் நடிக்க ஆரம்பித்தார்.

 இதுவரை அவர் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். அவற்றில் புஷ்பக விமானம், நாகரஹாவு, ஆப்த ரக்சகா, குரிகலு சார் குரிகலு உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு