டான்சர் ரமேஷ் மரணம்: கொலையா..? தற்கொலையா..? -வேறு வேறு காரணம் சொல்லும் மனைவிகள்-

ஆசிரியர் - Editor II
டான்சர் ரமேஷ் மரணம்: கொலையா..? தற்கொலையா..? -வேறு வேறு காரணம் சொல்லும் மனைவிகள்-

டிக்டாக் மற்றும் சமூக வலைதளம் மூலம் பிரபலம் அடைந்து, சினிமா படங்களிலும் நடமாடியுள்ள டான்சர் ரமேசின் உயிளப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

டான்சர் ரமேஷுக்கு இரு மனைவிகள் உள்ளனர். பிரபலம் ஆவதற்கு முன்னர் மூர் மார்க்கெட் பகுதியில் உள்ள முதல் மனைவி சித்ரா மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளார். 

பிரபலம் ஆன பின், முதல் மற்றும் 2 ஆவது மனைவிகளுக்கு இடையே தகராறு ஏற்படவே, பின்னர், கே.பி. பார்க் பகுதியில் உள்ள 2 ஆவது மனைவியான இன்பவள்ளி வீட்டில் தங்கி வந்துள்ளார்.

இதையடுத்து, ரமேஷ் தனது பிறந்த நாளான நேற்று 28 ஆம் திகதி நண்பர்களுக்கு விருந்து வைக்க தனது 2 ஆவது மனைவி இன்பவள்ளியிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. 

மனைவி பணம் தர மறுக்கவே, ரமேஷ் விரக்தியில் புளியந்தோப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

தகவலின் பேரில் வந்த பொலிஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டாவது மனைவி தரப்பில், ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. 

எனினும், முதல் மனைவி சித்ரா, தனது கணவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முறைப்பாடு செய்துள்ளார். அதன் அடிப்படையில், சந்தேக மரணமாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு