மாகாணசபைக்கு அதிகாரங்கள் இல்லை என்பவர்கள் மாகாணசபை தேர்தலுக்கு அடிபடுவது ஏன்?

ஆசிரியர் - Editor I
மாகாணசபைக்கு அதிகாரங்கள் இல்லை என்பவர்கள் மாகாணசபை தேர்தலுக்கு அடிபடுவது ஏன்?

வடக்கு மாகாண சபை நிர்வாகத்திற்கான அதிகாரம், நிதியொதுக்கீடு இல்லை என்று கூறுபவர்கள் மீண்டும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட முண்டியடிப்பது ஏன்?

மேற்கண்டவாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், கிளிநொச்சி அறிவியல்நகரில் பொறியியல்பீடத்தை ஆரம்பித்தது போன்று, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வரை ரயிலைக் கொண்டு சென்ற எம்மால் 

வடக்கு மாகாணம் எமது கைகளில் கிடைக்கும் பட்சத்தில், மூன்று வருடங்களில் பாலும் தேனும் ஓடும் என்பதற்கு அமைவாக அனைத்துத் துறைகளையும் அபிவிருத்தியின்பால் முன்னெடுத்துச் செல்வோமெனத் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு