கேபிள் ரீ.வி வயர்கள் தொடர்ந்து அகற்றப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
கேபிள் ரீ.வி வயர்கள் தொடர்ந்து அகற்றப்படுகிறது..

இ.மி.சபையினைத் தொடர்ந்து தொலைத் தொடர்பு சேவை நிலையமும் நேற்றைய தினம் உள்ளூர் தொலைக் காட்சி கேபிள் இணைப்பு வயர்களை அறுத்தமையினால் பல இடங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டன. 

யாழ்ப்பாண குடாநாட்டில் தற்போது சுமார் 250 கேபிள் உரிமையாளர்கள் மாவட்டம் முழுமையாக தொலைக்காட்சி கேபிள் இணைப்பு வயர்களை வழங்கி வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த மாதம் பருத்தித்துறையில் இருவர் மின்சா்ம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தினையடுத்து இ.மி.சபை நீதிமன்ற அனுமதியுடன் உள்ளூர் தொலைக்காட்சி கேபிள் இணைப்புக்களை அதிரடியாக அகற்றியது. 

இதனால் குடாநாட்டின் சேவைகள் முழுமையாக தடைப்பட்ட நிலையில் தற்காலிக இணக்கத்தில் சேவைகள் தொடர்ந்தன.

இந்த நிலையில் கடந்த வாரம் தொலைத் தொடர்பு சேவை நிலையதமும் தனது கம்பங்களின் ஊடாகச் செல்லும் உள்ளூர் கேபிள்கள் அகற்றப்பட வேண்டும் என பத்திரிகை அறிவித்தல் விடுத்த நிலையில் நேற்றைய தினம் காலையில் தமது தூண்களில் இருந்த கேபிள்களை அகற்றினார்.

இதன் கா்ணமாகவும் சில இடங்களில் தொலைக்காட்சி சேவைகள் பாதிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு