முல்லைத்தீவு- சாலை பகுதியிலிருந்து தென்பகுதி மீனவா்கள் வெளியேறாவிட்டால் போராட்டம் வெடிக்கும்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு- சாலை பகுதியிலிருந்து தென்பகுதி மீனவா்கள் வெளியேறாவிட்டால் போராட்டம் வெடிக்கும்..

முல்லைத்தீவு சாலை பகுதியில் தென்பகுதி மீனவர்களால் புதிதாக வாடிகள் அமைக்கப்படுவதாக கூறியிருக்கும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம், மேற்படி தென்பகுதி மீனவர்களை முல்லைத்தீவிலிருந்து வெளியேற்றாவிட்டால் யாழ்ப்பாணத்தை போன்று முல்லைத்  தீவிலும் மக்கள் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தப்போதாகவும் கூறியிருக்கின்றார்கள்.

மேற்படிவிடயம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தும் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனை மாவட்ட கடற்றொழிலாளர் சமாச பிரதிநிதிகள் நேற்று சந்தித் து கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே மேற்படி விடயத்தை கூறியிருப்பதாக அறிய முடிகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை பகு

தியை அண்மித்த பகுதியில் புதிதாக வாடிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக பொறுப்புவாய்ந்தவர்கள் தொடர்ந்தும் மௌனமாக இருந்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் ம க்கள் போராட்டங்களினால் தொடர்ந்தும் கடலட்டை பிடிக்க முடியாத நிலை உருவாகியிருக் கும் நிலையில், முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்படுகின்றது. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மீனவர்க

ள் பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் போராட்டங்களை நடத்தியதன் விளைவாக பிரச்சினைகளை பேச்சுவார்த்தை ஊடாக தீர்ப்பதற்கு இணக்கம் காணப்பட்டு எதிர்வரும் 26ம் திகதி பேச் சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் முல்லைத்தீவு மாவட்ட கட ற்றொழிலாளர் சமாசத்தின் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ளும்படி 

முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்தவர்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கின்றோம். இதன டிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிமாவட்ட மீனவர்களால் முல்லைத்தீவு மாவட் டத்தில் வாழும் 4350 மீன குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கப்படுவதை அங்கீ கரிக்க இயலாது. இவை தொடர்பாக பேச்சுவார்த்தை ஊடாக பேசி தீர்ப்பதற்கே நாங்களும் 

விரும்புகிறோம். அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும். இல்லையேல் தென்பகுதி மீனவர்க ளின் அத்துமீறல்களை எதிர்த்து நாங்களும் போராட்டங்களை நடாத்துவோம் என கூறியுள்ள hர்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு