வீதியை கடக்க முயற்சித்த பெண் மீது மோதிய நகரசபை பவுசர் வாகனம்! பெண் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
வீதியை கடக்க முயற்சித்த பெண் மீது மோதிய நகரசபை பவுசர் வாகனம்! பெண் படுகாயம்..

வவுனியா - மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் மீது நகரசபை பவுசர் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் வீதியை கடக்க முயன்றபோது அவர் மீது பவுசர் வாகனம் மோதியுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு