அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் இளைஞன் பலி! புதுவருட தினத்தில் பயங்கரம்...

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் இளைஞன் பலி! புதுவருட தினத்தில் பயங்கரம்...

வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் கிளிநொச்சி - விநாயகர்புரம் கிராமத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

விநாயகபுரத்தைச் சேர்ந்த தவக்குமார் சுரேஸ் என்ற 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த இளைஞரின் வீட்டுக்குள் புகுந்த நபர்கள், அவரை கத்தியால் குத்தியும், பலமாக தாக்கியும் உள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவரை, அயலவர்கள் மீட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு