தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் கன்ரர் ரக வாகனம் மோதி விபத்து!
தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் பிரசாந்த் வேலைக்கு செல்லும் வழியில் வல்லை – அச்சுவேலி சந்தி பகுதியில் கன்ரர் ரக வாகனம் மோதி இன்று(07-12-2017) காலை விபத்தில் சிக்கியுள்ளார்.
தற்போது யாழ் போதனா வைத்தியசாலையின் 24ம் விடுதியில் அனுமதிக்கப்படு சிகிச்சையளிக்கப்படுகின்றது.
இது உண்மையில் விபத்தா? இல்லை திட்டமிட்ட சதியின் மூலமான விபத்துப் போன்ற தாக்குதலா? என்று தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இவர் தீவிர தமிழ் தேசிய செயற்பாட்டாளரும், சமூகவலைத்தள செயற்பாட்டாளருமாவார். இவரது சமூகவலைத்தள கருத்துக்கள் பல பலருக்கு சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.